பாடல் 629 - குன்றக்குடி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானான தனதான தானான தனதான தானான தனதான ...... தனதான |
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும் நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு நாடாசை தருமோக ...... வலையூடே ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி லேவாரும் விழிமாதர் ...... துயரூடே ஏகாம லழியாத மேலான பதமீதி லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய் தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு தானேறி விளையாடு ...... மொருபோதில் தாயாக வருசோதை காணாது களவாடு தாமோத ரன்முராரி ...... மருகோனே மாமாது வனமாது கார்மேவு சிலைமாது மாலாகி விளையாடு ...... புயவீரா வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ மாயூர கிரிமேவு ...... பெருமாளே. |
* தாமம் = கயிறு, உதரம் = வயிறு, கயிற்றினால் வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் ஆயினான்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.குயிலின் இசை, நிலவு, மன்மதன், அவனது அம்புகள், வசை பேசும் மாதர், புல்லாங்குழலின் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 629 - குன்றக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தானான, மாது, வரும், பேசும், அடைந்து, ஆகிய, வள்ளி, நாள், உடைய, குயிலின், விளையாடு, மாலாகி, தாயாக, தேனாறு, பெருமாளே, மாயூர, சிறந்த