பாடல் 618 - கநகமலை - திருப்புகழ்

ராகம் - ஸாவேரி ;
தாளம் - அங்கதாளம் - 6
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனன தந்தத் தனதனன தனன தந்தத் தனதனன தனன தந்தத் ...... தனதான |
அரிவையர்கள் தொடரு மின்பத் துலகுநெறி மிகம ருண்டிட் டசடனென மனது நொந்திட் ...... டயராமல் அநுதினமு முவகை மிஞ்சிச் சுகநெறியை விழைவு கொண்டிட் டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ பரிதிமதி நிறைய நின்ற· தெனவொளிரு முனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும் படர்கள்முழு வதும கன்றுட் பரிவினொடு துதிபு கன்றெற் பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே செருவிலகு மசுரர் மங்கக் குலகிரிகள் நடுந டுங்கச் சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான செயமுதவு மலர்பொ ருங்கைத் தலமிலகு மயில்கொ ளுஞ்சத் தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே கருணைபொழி கிருபை முந்தப் பரிவினொடு கவுரி கொஞ்சக் கலகலென வருக டம்பத் ...... திருமார்பா கரிமுகவர் தமைய னென்றுற் றிடுமிளைய குமர பண்பிற் கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே. |
* கனகமலை வட ஆற்காடு மாவட்டத்தில் போரூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 9 மைலில் தேவிகாபுரத்தின் அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 618 - கநகமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமை, தந்தத், தனதனன, அன்போடு, விளங்கும், பெற்று, பெருமாளே, பரிவினொடு, கந்தப், கொண்டு