பாடல் 616 - கொங்கணகிரி - திருப்புகழ்

ராகம் - மனோலயம்;
தாளம் - ஆதி - கண்டநடை - 2
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தத்ததன ...... தனதான |
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே. |
* கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது.திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று அருணகிரியார் வேண்டுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 616 - கொங்கணகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அருள், புரிவாயாக, முதலை, தந்ததன, அருள்வாயாக, தத்ததன, யருள்வாயே, பொருளை, ரகசியப், கொங்கணகிரி, சென்ற, கரையில், ஓராண்டு, பாலகனை, எனக்கு, பெருமாளே, புத்தியினை, ஐந்து, வளரும், உயிர், நாட்டில், என்னும்