பாடல் 613 - குருடிமலை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
கருடன் மிசைவரு கரிய புயலென கமல மணியென ...... வுலகோரைக் கதறி யவர்பெயர் செருகி மனமது கருதி முதுமொழி ...... களைநாடித் திருடி யொருபடி நெருடி யறிவிலர் செவியில் நுழைவன ...... கவிபாடித் திரியு மவர்சில புலவர் மொழிவது சிறிது முணர்வகை ...... யறியேனே வருடை யினமது முருடு படுமகில் மரமு மருதமு ...... மடிசாய மதுர மெனுநதி பெருகி யிருகரை வழிய வகைவகை ...... குதிபாயுங் குருடி மலையுறை முருக குலவட குவடு தவிடெழ ...... மயிலேறுங் குமர குருபர திமிர தினகர குறைவி லிமையவர் ...... பெருமாளே. |
* குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 613 - குருடிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, ஆகிய, என்றும், குருடி, பெருகி, பெருமாளே