பாடல் 608 - ராஜகெம்பீரவளநாட்டு மலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தானனந் தானதன தாத்த தனதன தானனந் தானதன தாத்த தனதன தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான |
மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு ...... கண்டுபோல மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ...... மன்றுளாடி சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு போகபண் டாரபணி தோற்ற அரைகொடு தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ...... வந்துகாசு தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு சீவனொன் றானபர மார்த்த தெரிசனை ...... வந்துதாராய் வேகமுண் டாகியுமை சாற்று மளவினில் மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை வீரனென் பானொருப ராக்ர னெனவர ...... அன்றுசோமன் மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை வீழநன் பாரதியு மூக்கு நழுவிட ...... வந்தமாயன் ஏகநின் றாகியமர் தோற்று வதறிட வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள் ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் ...... வந்துசேயென் றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே. |
* இது தற்போது திருக்கற்குடி என்று வழங்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் மலை என்றும் கூறுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 608 - ராஜகெம்பீரவளநாட்டு மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தோற்ற, செய்த, கொண்டும், தோல்வி, அடையும்படிச், தானனந், தனதன, வந்து, என்றும், தானதன, தோல்வியுறச், தாத்த, தோன்றி, உள்ள, அற்று, நீக்கி, அந்த, தந்தருளுக, உடல், நாட்டு, தம்பிரானே, மூக்கு, அடையும்படி, தெரிசனை, கொண்ட