பாடல் 600 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்த தனதனன தத்த தனதனன தத்த தனதனன ...... தனதான |
அத்து கிரினலத ரத்து அலனவள கத்து வளர்செய்புள ...... கிதபூத ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி யத்தி யிடனுறையு ...... நெடுமாம ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத லத்து ரகசிகரி ...... பகராதே யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை யத்தி னிடையடிமை ...... விழலாமோ தத்து கவனவரி ணத்து வுபநிடவி தத்து முநியுதவு ...... மொழியாறுத் தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர் தத்தை தழுவியப ...... னிருதோளா தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர் தத்து மலையவுணர் ...... குலநாகந் தத்த மிசைமரக தத்த மனியமயில் தத்த விடுமமரர் ...... பெருமாளே. |
(விலைமாதரின்) அந்தப் பவளம் போன்ற சிவந்த உதட்டிலும், இருள் போன்ற கூந்தலிலும், மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய மார்பகங்களிலும், இரண்டு தாமரை போன்ற கைகளிலும் மனம் உருகி, கடலிடை இருந்த பெரிய மாமரத்தினுடைய (சூரனுடைய) மலரையும் பழத்தையும் கலக்கி (அதாவது சூரனைக் கொன்று) பிறகு வந்து அமர்ந்தருளிய தலமாகிய பாம்பு மலையை (திருச்செங்கோட்டை)* ஓதித் துதியாமல், எலும்பும் மலமும் கூடிய உடலைச் சுமந்து, எரிகின்ற நரகத்தில் அடிமையாகிய நான் விழலாமோ? வேகமான நடையை உடைய பெண்மானிடத்தில் வேத ஒழுக்கம் உடைய சிவ முநிவர் தந்த வார்த்தையால் (பிறந்தவளும்), பாலையும், தேனையும், அமுதத்தையும் ஒத்த இனிய மொழியை உடையவளும், குறவர் பெண்ணாகிய கிளி போன்றவளுமான வள்ளியை அணைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, அலை வீசும் கடல் போல, குதிரைப் படையை மிக வேகமாகச் செலுத்தும் அசுரர்களும், யுத்தகளத்தில் பாய்ந்து போரிடும் அவுணர்களும், குலவரைகள் எட்டும் நடுங்க, அவர்கள் மீது பசும் பொன் மயமான மயிலைப் பாய விட்டவனே, தேவர்களின் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 600 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தத்து, தனதனன, யத்தி, தத்தை, திருச்செங்கோடு, இருப்பதால், என்றும், உடைய, பெருமாளே, ரத்தி, ரத்து, விழலாமோ