பாடல் 591 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான |
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக் கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக் கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார் தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத் தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக் கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக் கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத் தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத் துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப் பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத் தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித் தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட் குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற் கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக் கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 591 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தத், கொண்ட, கொண்டு, காட்டிக், காட்டி, அழகிய, தந்த, கொங்கு, தனத்தந், சென்று, மீது, செய்து, குளிர்ந்த, திருச்செங்கோடு, என்றும், இருப்பதால், போல், டாட்டத், பெறுவேனோ, வேட்டுப், வாழ்க்கைத், துன்ப, தந்து, பெருமாளே, டவர்க்குங்