பாடல் 511 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன தனன தந்தன தந்த தானன ...... தந்ததான |
மதிய மண்குண மஞ்சு நால்முக நகர முன்கலை கங்கை நால்குண மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண மதன முன்தரி சண்ட மாருத மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரென்றுசேருங் கதிர டங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் ரண்டு கால்மிசை ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங் கருணை யிந்திரி யங்கள் சோதிய அருண சந்திர மண்ட லீகரர் கதிகொள் யந்திர விந்து நாதமொ ...... டென்றுசேர்வேன் அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொ டைந்து பேரிகை டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம் அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ டிதவி தம்பெறு சிந்து பாடிட அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு உதிர மண்டல மெங்கு மாயொளி யெழகு மண்டியெ ழுந்து சூரரை உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ உறுசி னங்கொடெ திர்ந்த சேவக மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே. |
சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.*1 (அந்த மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்) ந என்னும் எழுத்தையும், (பஞ்ச*2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது. நீர் (அப்பு மண்டலம்) நான்கு*3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் ம என்னும் எழுத்தைக் குறிக்கும். அப்பு மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில் சி என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்) மூன்று*4 குணமும் முக்கோணமும் கொண்டது. அழித்தல் தன்மையை தன்னிடத்தே கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு*5 குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள வா என்னும் எழுத்தைக் குறிக்கும். விரிந்துள்ள ஆகாயம் ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்த ஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும். (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை, பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும். (அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க, சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும் மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்? ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க, பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர் என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே மேலெழுந்து பொங்க, இரத்தப் பெருக்கின் வெள்ளம் எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும் மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே, மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.
*1 - மண்ணின் ஐந்து குணங்கள்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
*2 - ஐந்து கலைகள்:நிவிர்த்திகலை - ஆன்மாக்களை பாசத்தினின்று விடுவிப்பது.பிரதிஷ்டாகலை - ஆன்மாக்களை முக்தியில் உய்ப்பது.வித்யாகலை - பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது.சாந்திகலை - ஆன்மாக்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது.சாந்தியதீதகலை - சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.
*3 - நீரின் நான்கு குணங்கள்: சப்தம், பரிசம், உருவம், ரஸம்.
*4 - தீயின் முக்குணங்கள்: சப்தம், பரிசம், உருவம்.
*5 - வாயுவின் இரண்டு குணங்கள்: சப்தம், பரிசம்.
*6 இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 511 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மண்டலம், என்னும், இதழ், கரம், கொண்டது, பஞ்சாட்சரத்தில், ஒன்று, அக்கினி, பத்து, இடைகலை, எழுத்தைக், குணங்கள், உள்ள, பிங்கலை, பரிசம், சந்திர, தானன, தந்த, தந்தன, கருவி, ஐந்து, சப்தம், குறிக்கும், செய்வது, என்றும், ஆன்மாக்களுக்கு, ஆன்மாக்களை, உருவம், உடலில், முனை, சுழு, யும், பெயர்களும், உரிய, சுவாசம், விடும், பெயர், ஸஹஸ்ராரம், சக்கரம், நாடிகளுள், காற்றுக்கு, சூரிய, தொந்த, டண்டட, தோதக, சிந்து, தாரைகள், டகுட, பேரிகை, அண்ட, ரண்டு, டங்கு, டாடிக, மண்டல, தம்பிரானே, ரேசகம், தாளம், பூரகம், இரண்டு, வகையில், வாயு, அப்பு, கொள்ளும், மண்ணின், குணம், முன், தீயின்