பாடல் 51 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தந்தத் தனனத் தந்தத் தனனத் தந்தத் தனனத் ...... தனதானா |
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழலிற் ...... கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற் சந்திப் பவரைச் ...... சருவாதே சந்தப் படியுற் றென்றற் றலையிற் சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே அங்கப் படைவிட் டன்றைப் படுகைக் கந்திக் கடலிற் ...... கடிதோடா அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற் றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற் சென்றுற் றவர்தற் ...... பொருளானாய் சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற் செந்திற் குமரப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 51 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தத், தனனத், சென்று, வைத்து, பெருமாளே, அழகிய, பொழிலிற், சந்தப், கடலிற், அந்தப், குமரப்