பாடல் 505 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -
ஷண்முகப்ரியா; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தானா தனத்ததன தானா தனத்ததன தானா தனத்ததன ...... தனதான |
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி நாயே னரற்றுமொழி ...... வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன ...... தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி தோலா சனத்தியுமை ...... யருள்பாலா தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த தோழா கடப்பமல ...... ரணிவோனே ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு மேராள் குறத்திதிரு ...... மணவாளா ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 505 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தனத்ததன, கொடுத்தருள், பெருமாளே, மலர்