பாடல் 49 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .....
தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா |
குழைக்குஞ்சந் தனச்செங்குங் குமத்தின்சந் தநற்குன்றங் குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென் றுரைக்குஞ்செங் கயற்கண்கொண் டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே உழைக்குஞ்சங் கடத்துன்பன் சுகப்பண்டஞ் சுகித்துண்டுண் டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதே உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும் ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண் டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய் தழைக்குங்கொன் றையைச்செம்பொன் சடைக்கண்டங் கியைத்தங்குந் தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார் தனிப்பங்கின் புறத்தின்செம் பரத்தின்பங் கயத்தின்சஞ் சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வே கழைக்குங்குஞ் சரக்கொம்புங் கலைக்கொம்புங் கதித்தென்றுங் கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே கறுக்குங்கொண் டலிற்பொங்குங் கடற்சங்கங் கொழிக்குஞ்செந் திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 49 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தம், கொண்டு, தழைத்துள்ள, சிவந்த, சேர்த்தும், எப்போதும், சிறந்த, மீன், பெருமாளே, அழகிய, போல், செவ்விய, கயல்