பாடல் 489 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான |
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள் மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள் இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும் இடும்பைப் பற்றிய தாமென மேயினர் பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர் இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும் பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள் மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள் பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே வணங்கச் சித்தமி லாதஇ ராவணன் சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர் குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள் பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள் சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 489 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனந்தத், மனம், கொண்டு, தத்தன, பேசுபவர்கள், பெரிய, பேசி, உடையவர்கள், போர், முருகோனே, பித்தளை, பற்றிய, யாதவர், வாசனை, ஞானிகள், பிடுங்கிக், பெருமாளே