பாடல் 452 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - வஸந்தா ;
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் ...... தனதான |
குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் கரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் ககன மறைபட ஆடிய செம்புட் பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா கயிலை மலைதனி லாடிய தந்தைக் குருக மனமுன நாடியெ கொஞ்சிக் கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 452 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தத், அழகிய, திகுதிகு, தீதக, தாதக, தகதிமி, தொந்தத், திகுட, தகுதகு, தனதன, கொடிய, தானன, தகுட, பெருமாளே, கந்தப், நடனம், செவ்விய, சூரர்கள், பறைவகை, தடுடு, டுடுடுடு, கொஞ்சிக், டாடக, தபலை, வீணைகள், கரடி, பசிகள்