பாடல் 45 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான |
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு ...... முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு ...... மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாத ...... ருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனை ...... யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை கொன்றகும ரேச ...... குருநாதா மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை வண்டுபடு வாவி ...... புடைசூழ மந்திநட மாடு செந்தினகர் மேவு மைந்தஅம ரேசர் ...... பெருமாளே. |
மான் கன்றை வெல்லும் கண்களாலும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் மணமுள்ள மலர் சூடும் அந்த வகையினாலும், நல்லபடியே கைப் பொருள் முழுதும் வரும்படி வெற்றியுடன் விலை கூறி (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, விஷத்தை உடைய பாம்பு உண்ணும் தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற என்னை அருட்கண் பார்த்தருள்க. குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே, குரு நாதனே, மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, தேவர்கள் பெருமாளே.
* போகி = பாம்பு வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு. தந்ததன தான தந்ததன தான தனதான பாடல் கன்றிவரு நீல குங்குமப டீர முலைகாட்டி கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை விலைகாட்டி நன்றுபொரு டீது வென்றுவிலை பேசி ருடனாட்ட நஞ்சுபுரி தேரை யங்கமது வாக றருள்வாயே குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங் மணிகூர்வாய் கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச் கொடுபோர்செய் மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை புடைசூழ மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும் பெருமாளே. .. கன்றிப் போய் நீலம் பாய்ந்த, குங்குமமும் சந்தனமும் கலந்த, தாமரை மலரைப் போன்ற தங்கள் மார்பகத்தைக் காட்டி, கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் இறுக்கி முடித்து, கடைக்கண்களால் ஜாடை காட்டி, தங்களது விலையையும் குறிப்பாகக் காட்டி, வந்தவர் தரும் பொருள் ஏற்புடைத்து அல்லது ஏற்காது என்று பேரம் பேசி, (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, பாம்பின் விஷம் பாய்ந்த தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற எனக்கு ஒரு நல்வாக்கு அருள்வாயாக. குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, கிரெளஞ்ச மலை இடிந்து நொறுங்கும்படியாக மோதிய கூர்மையான வேலைக் கரத்தில் கொண்டு போர் செய்தவனே, மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, அந்த அசுரர் குலத்துக்கு யமனாக அமைந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 45 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததன, பாம்பு, பெருமாளே, தேரை, கூர்மையான, பேசி, உடைய, காட்டி, பாம்பைக், அந்தப், கொத்திக், வாயில், கொண்ட, மயிலின், சிவந்த, கண்களையும், படத்தை, மீது, வீசும்படி, அழகிய, தனது, கோடுகளையும், வீசும், நடனம், குரங்குகள், பக்கங்களில், செய்யும், திருச்செந்தூரில், பாய்ந்த, வீரனே, வீற்றிருக்கும், குளங்களும், ஒலிக்கும், கமுகு, குண்டு, மணம், தென்னை, நெருங்கு, வண்டுகள், சோலைகளும், அசுரர், உடல், மன்றல்கமழ், கொண்டமயி, மணிகூர்வாய், தெங்குதிரள், சோலை, மந்திநட, புடைசூழ, போகி, செங்கண்வரி, கங்குல்செறி, மேவு, தனதான, யாமை, வென்றுவிலை, குன்றிமணி, யங்கமது, தாமரை, நிறம், வேசியர்களோடு, செய்கின்ற, நம்பும்படி, விளையாடி, என்னும்படி, நைந்து, அத்தன்மையதாகி, தம்மை, பொருள், மேகம், அடர்ந்த, கூந்தல், கலையாத, அந்த, வண்ணம், போகின்ற