பாடல் 445 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு மேருகிரி யானகொடு ...... தனபார மீதுபுர ளாபரண சோதிவித மானநகை மேகமனு காடுகட ...... லிருள்மேவி நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள நாணமழி வார்களுட ...... னுறவாடி நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின் ஞானசிவ மானபத ...... மருள்வாயே கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய கோலமயி லானபத ...... மருள்வோனே கூடஅர னோடுநட மாடரிய காளியருள் கூருசிவ காமியுமை ...... யருள்பாலா ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன மாரவிளை யாடிமண ...... மருள்வோனே ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே. |
'கூறுமடியார்கள் வினை', 'ஆறுமுகமான', 'ஆதியருணாபுரியில்', என்ற சொற்றொடர்கள் 'ஏறுமயில் ஏறி' என்னும் பாடலை ஒத்திருப்பதைக் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 445 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, மணம், வினை, குழந்தையே, கொண்ட, வீசும், மருள்வோனே, பெருமாளே