பாடல் 411 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - அங்கதாளம் - 16
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தானான தான தானான தான ...... தந்ததான |
காணாத தூர நீணாத வாரி காதார வாரம ...... தன்பினாலே காலாளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல் நாணான தோகை நூலாடை சோர நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே நானாப வாத மேலாக ஆக நாடோறும் வாடிம ...... யங்கலாமோ சோணாச லேச பூணார நீடு தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா தோலாத வீர வேலால டாத சூராளன் மாளவெ ...... குண்டகோவே சேணாடர் லோகம் வாழ்மாதி யானை தீராத காதல்சி ...... றந்தமார்பா தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே. |
* தக்கன் யாகத்தில் சிவனுடைய அம்சமான வீரபத்திரர் சந்திரனைக் காலால் துகைத்தார் - சிவபுராணம்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 411 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, உள்ள, கொண்ட, தேவர்கள், தலைவனே, தேவாதி, தகதிமி, காலால், தகதகிடதகிட