பாடல் 386 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ..........
தனதன தனன தனந்த தானன தனதன தனன தனந்த தானன தனதன தனன தனந்த தானன ...... தனதான |
கரியுரி அரவ மணிந்த மேனியர் கலைமதி சலமு நிறைந்த வேணியர் கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின் கனமுலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை யமர்ந்த காரணர் கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ...... கண்டகாள விரிவென வுனது ளுகந்த வேலென மிகவிரு குழையு டர்ந்து வேளினை யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...... குண்டுநாடும் வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற விதமிகு கலவி பொருந்தி மேனியு மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ...... ழிந்திடாதோ எரிசொரி விழியு மிரண்டு வாளெயி றிருபிறை சயில மிரண்டு தோள்முகி லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ தெனவிழ முதுகு பிளந்து காளிக ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ எதிர்பொரு துதிர முகந்த வேகமு ...... கைந்தவேலா அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை அருணையி லறவு முயர்ந்த கோபுர மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும் அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள் அடவியி லரிவை குயங்கள் தோய்புய அரியர பிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே. |
* மன்மதன் திருமாலுக்கும், லக்ஷ்மிக்கும் பிறந்த மகன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 386 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வாழும், தனதன, விட்டு, வீசும், தானன, தனந்த, நிறைந்த, கண்கள், மிகவும், செய்து, போல், கோபித்து, உடையவனே, இரண்டு, வேடர்கள், பொருந்தி, வளர்ந்த, பருகி, மிரண்டு, முதுகு, வடிவை, நடந்து, தம்பிரானே