பாடல் 381 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான |
வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும் மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன் மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க மவுனமறை யோது வித்த ...... குருநாதா இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே. |
* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடம் பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் செவிலித்தாய் பாடுவது போல அமைந்தது.நிலவொளி, யாழிசை, கடல் ஒலி, மன்மதன், மலர்க் கணை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 381 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, கொண்ட, சுற்றி, மேரு, தத்த, பொன், நிற்கும், செலுத்திய, மிகவும், பெருமாளே, திக்கு, வெற்றி, சிறந்த, உடைய