பாடல் 37 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - பிலஹரி;
தாளம் - ஆதி - 2 களை
தானா தந்தத் தானா தந்தத் தானா தந்தத் ...... தனதானா |
ஓரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் ...... டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் ...... டுழல்மாதர் கூரா வன்பிற் சோரா நின்றக் கோயா நின்றுட் ...... குலையாதே கோடார் செம்பொற் றோளா நின்சொற் கோடா தென்கைக் ...... கருள்தாராய் தோரா வென்றிப் போரா மன்றற் றோளா குன்றைத் ...... தொளையாடீ சூதா யெண்டிக் கேயா வஞ்சச் சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச் சேவே றெந்தைக் ...... கினியோனே தேனே யன்பர்க் கேயா மின்சொற் சேயே செந்திற் ...... பெருமாளே. |
உண்மை என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அந்த உண்மையைப் பார்க்காமலும், அலங்காரம் செய்துகொண்டு வந்து, ஆண்களின் உயிர் சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது ஏதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து, திரிகின்ற பெண்களின் விருப்பமற்ற வெளிவேஷ அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடிய என் சா£ரம் ஓய்ந்துபோய் உள்ளம் குலைந்து போகாதபடியாக, மலைபோன்ற செவ்விய அழகிய தோளை உடையவனே, உனது திருப்புகழ் நேராக நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க. தோல்வியே தெரியாத வெற்றிப் போர் வீரா, மணம் வீசும் (மாலைகள் அணிந்த) தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையைத் தொளைத்தவனே, சூழ்ச்சி செய்து எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சகச் சூரனாம் மாமரம் அஞ்சப் போரிட்ட வேலனே, சிறப்பு மிகுந்த கொன்றைமாலை மார்பில் திகழ ரிஷபத்தில் ஏறும் எம் தந்தை சிவனாருக்கு இனியவனே, தேன் போல் இனிப்பவனே, அன்பர்க்கென்றே இனிய சொற்கள் கொண்ட சேயே, திருச்செந்தூரில் மேவிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 37 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தத், தானா, நின்று, உடையவனே, செய்து, தோளை, சேயே, றோளா, கேயா, அஞ்சப், பெருமாளே