பாடல் 33 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- ........
தனதன தனன தனத்தத் தாத்தன தனதன தனன தனத்தத் தாத்தன தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான |
இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே இலைபிள வதனை நடித்துக் கேட்கவு மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும் விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும் வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே வனைமனை புகுதி லடித்துப் போக்கவு மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள் வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ குருமணி வயிர மிழித்துக் கோட்டிய கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநீரூர் குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே முளையிள மதியை யெடுத்துச் சாத்திய சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 33 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தாத்தன, தனத்தத், விரிந்த, தான், பெருமாளே, சாத்திர, உடைய, வெளுத்துத், காட்டவு, சேர்க்கவும், நிந்தையாலே, காட்டிய