பாடல் 297 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ..........;
தாளம் - ........
தந்தந் தனதன தந்தந் தனதன தந்தந் தனதன ...... தனதான |
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை வந்துந் தியதிரு ...... மதனாலே வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற வஞ்சம் பதும்விடு ...... மதனாலே பங்கம் படுமென தங்கந் தனிலுதி பண்பொன் றியவொரு ...... கொடியான பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல் பொன்றுந் தனிமையை ...... நினையாயோ தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள் சென்றொன் றியபொழி ...... லதனூடே தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப் பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள் என்றும் புகழ்பெற ...... மலா£னும் பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி யென்றுஞ் செயவல ...... பெருமாளே. |
கப்பல்கள் செல்லும் கடலில் எங்கும் மாறுபட்டு ஏறி இறங்கும் அலைகள் வந்து வீசி இரைச்சலிடும் காரணத்தாலும், வஞ்சகம் கொண்ட திடமான நெஞ்சனும், நெருப்புப் போன்று ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்துபவனுமான மன்மதனாலும், அவமானம் உறுகின்ற என்னுடைய உடலிலிருந்து பிறந்த நற்குணம் நிரம்பிய, ஒரு கொடி போன்ற இடையை உடைய, பஞ்சு போல் மெல்லியளான, மயிலின் சாயலை உடைய என் மகள் உள்ளத்தில் சேர்ந்த காமத் தீயால் சாகும் நிலையிலே தனிமையோடு தவிப்பதை நீ சற்றேனும் நினைத்துப் பார்த்து அருளக்கூடாதா? தென்னை மரங்களின் கூட்டத்துடன் எங்கும் வாழைகள் அமைந்து நிறைந்த சோலைக்குள்ளே, தெந்தெந் தெனதென என்று நெருங்கி வந்து நின்று வண்டுகள் பாடவும், அக்கீதத்துக்கு ஏற்ப விளக்கத்துடனே மயில்கள் ஆடவும், நீர் நிறைந்த சுனைகளில் எங்கும் குவளைகள் எக்காலத்திலும் புகழ்பெறும்படி மலர்களைத் தருகின்ற அழகிய தெற்கிலே உள்ள திருத்தணிகையில் நின்றருளி, ஏழு உலகங்களையும் என்றைக்கும் படைக்கவல்ல பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளுடைய தாய் பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 297 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தந், எங்கும், தனதன, வந்து, உடைய, நிறைந்த, பெருமாளே, தெனதென, மதனாலே, வஞ்சம், தெந்தெந், குவளைகள்