பாடல் 277 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் -
செஞ்சுருட்டி/ஸஹானா
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2
தனதான தனத்தன தான தனதான தனத்தன தான தனதான தனத்தன தான ...... தனதான |
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல் தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி சலமான பயித்திய மாகி ...... தடுமாறித் தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய் கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக் களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு பவரோக வயித்திய நாத ...... பெருமாளே. |
அகலம், ஆழம் இவ்வளவு என்று காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே மூழ்கி, மெய் போன்ற பல பொய்களைப் பேசி, அந்த சம்சாரக் கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி, பெரியோர்களின் கூட்டத்தில் சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி, நல்ல நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல், உடலில் முதன்மையான நோய்கள் வந்து தாக்கவும், இந்த சம்சார சாகரத்தில் பிறவி நோய் என்னும் பல அலைகள் வீசவும், கோபம் கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல், பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து, உன் புகழ் ஓதி இவ்வுலகில் உய்யுமாறு உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக. மேன்மை தங்கிய கல்யாண மாப்பிள்ளையாகவே குறக் குல வள்ளி தேவியிடத்தில் என்றும் விளங்கி உல்லாசமாக, அழகு நிறைந்த அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து மகிழும் உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை இன்பம் அடையும்படியாகவே வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும். அவ்வாறு என்னை அருளினால் அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே. பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து வாழும்படியாக அருளும் செவ்வேளே, இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற, பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 277 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தனத்தன, புரிந்து, உன்னை, என்னை, பெருமாளே, பேசி, மூழ்கி, தகிட, தடுமாறித்