பாடல் 247 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - கானடா;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் ...... தனதான |
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங் கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங் கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல் பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம் பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும் பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர் திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச் செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின் செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே. |
எத்தனை கலகச் சண்டைகள், எத்தனை சித்து வேலைகள், அங்கு எத்தனை வியாதிகள், எத்தனை பைத்தியக்காரச் செயல்கள், அசையும் உயிராகவும், அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை, நீங்காத அச்சம் தரும் செயல்கள் எத்தனை, அங்கே வலிமையுடைய ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை, அங்கே ஆசைகள் எத்தனை விதமானவையோ, புலால் உண்டு தினந்தோறும் பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை, பித்துப்பிடித்தவன் போன்ற யான் வயிற்றில் உண்டு இவ்வாறு கெட்டுப் போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட, உனது அடியார் கூட்டத்தின் செயல்களான தன்மையும், யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும், பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும், பாச பந்தங்களால் அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க. தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னான - என்ற தாளத்தில் ஒலிக்கும் நூற்றுக்கணக்கான முரசுகளின் ஒலயுடன், சித்தர்களும், மலை வேடர்களும், அரசர்களும், இறைவனின் அடியார்களும், எட்டுத் திக்குகளிலும் மலையை வலம் வந்து பணிய, சிவந்த கண்களை உடைய சிங்கம் கர்ஜிக்கும் ஞானத் திருத்தணிகை மலையில் வாழ்பவனே, செக்கச் சிவந்த நிறத்திலே இருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 247 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத, னத்தந், எத்தனை, டிக்குகுகு, டீகு, தத்தந், செயல்கள், டூடு, டுட்டுண், தத்ததன, தகுதீதோ, தத்தம், தக்குகுகு, நிற்பதும், சிவந்த, உண்டு, அங்கே, தகிட, ராது, பெருமாளே