பாடல் 230 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த ...... தனதான |
மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின் ...... விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்த மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப் பெருகாத லுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்ச ...... மறவாதே பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே குருவா யரற்கு முபதேசம் வைத்த குகனே குறத்தி ...... மணவாளா குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து குடகா விரிக்கு ...... வடபாலார் திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர் சிறுவா கரிக்கு ...... மிளையோனே திருமால் தனக்கு மருகா வரக்கர் சிரமே துணித்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 230 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தனத்த, குறத்தி, பெருமாளே, குகனே, லுற்ற, மயக்கி, பொறுத்து