பாடல் 221 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ஆனந்த பைரவி;
தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14
எடுப்பு /40/4/4
எடுப்பு /40/4/4
தனதன தனனா தனனா தனந்த தத்தம் ...... தனதான |
தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் ...... வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் ...... மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ டுக்குங் ...... கணையாலே புளகித முலையா ளலையா மனஞ்ச லித்தும் ...... விடலாமோ ஒருமலை யிருகூ றெழவே யுரம்பு குத்தும் ...... வடிவேலா ஒளிவளர் திருவே ரகமே யுகந்து நிற்கும் ...... முருகோனே அருமறை தமிழ்நூ லடைவே தெரிந்து ரைக்கும் ...... புலவோனே அரியரி பிரமா தியர்கால் விலங்க விழ்க்கும் ...... பெருமாளே. |
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 221 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மன்மதன், பெருமாளே, தனனா