பாடல் 147 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல் குமுத வதரமு ...... றுவலாரம் குழைம கரம்வளை மொழிகு யிலமுது குயமு ளரிமுகை ...... கிரிசூது விழிக யலயில்ப கழிவ ருணிகரு விளைகு வளைவிட ...... மெனநாயேன் மிகவ ரிவையரை அவநெ றிகள்சொலி வெறிது ளம்விதன ...... முறலாமோ கழல்ப ணியவினை கழல்ப ணியையணி கழல்ப ணியவருள் ...... மயில்வீரா கமலை திருமரு கமலை நிருதரு கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா பழனி மலைவரு பழநி மலைதரு பழநி மலைமுரு ...... கவிசாகா பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் ...... பெருமாளே. |
பெண்களின் கூந்தல் காடு, மேகம் (போன்றது). நெற்றி வீரம் பொருந்திய வில். வாய் இதழ்கள் குமுத மலர். பற்கள் முத்துக்கள். மகர மீன் வடிவம் பொருந்திய குண்டலம் தரித்துள்ள காது வள்ளிக் கொடி இலை போன்றது. பேச்சு குயில் போன்றும் அமுதம் போன்றும் இனியது. மார்பகங்கள் தாமரை அரும்பையும், மலையையும், சூதாடும் கருவியையும் போன்றவை. கண்கள் கயல் மீன், வேல் என்றும், அம்பு, கடல், கரு விளை மலர், நீலோற்பல மலர், நஞ்சு என்றெல்லாம் உவமை கூறி, நாயேனாகிய அடியேன் மிகவும் பெண்களை சிறிதும் பயனற்ற வழிகளில் வியந்துரைத்து வீணாக என் உள்ளம் விசனப்படலாமோ? செய்த வினைகள் கழல (நீங்க), வீரக் கழலையும் தண்டை முதலிய ஆபரணங்களையும் அணிந்துள்ள திருவடிகளைப் பணியும்படி அருள் புரிவாயாக, மயில் வீரனே, தாமரையில் வாழும் லக்ஷ்மியின் மருகனே, (கிரெளஞ்சம், எழு கிரி ஆகிய) மலைவாழ் அரக்கர்கள் அழிய அந்த மலைகளைத் தொளைத்த ஒளி வீசும் வேலனே, பழம் போன்றவளும், இமய மலையில் அவதரித்தவளும், பழமையுடைய நிமலையும் ஆகிய பார்வதி பெற்ற, பழநிமலைவாழ் முருகனே, விசாக மூர்த்தியே, பரந்துள்ள கடலில் மீது பாணத்தைச் செலுத்தி அடக்கிய கடல் நிறம் உடைய (ராமனாகிய) திருமால் போற்றும், தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 147 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மலர், கமலை, கழல்ப, மீன், ஆகிய, போன்றும், கடல், பெருமாளே, குமுத, பழநி, பரவு, போன்றது, பொருந்திய