பாடல் 1312 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தானதன தந்த தந்த ...... தனதான |
வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப் பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம் போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள் ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை யாரமர வந்த லம்பு ...... துறைசேரத் தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச் சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே. |
(இவர்களது மார்பகங்களை) யானைக்கு ஒப்பிடலாம் என்றால், அதன் முகம் ஒரு காலத்தில் (சிவபெருமானால்) கிழிபட்டு விழுந்தது. அரும்பை ஒப்பிடலாம் என்றால் அது மலர்ந்து வாடுகின்றது. பெரிய மலையாகிய கயிலையை ஒப்பிடலாம் என்றால் அது (ராவணனால்) அசைக்கப்பட்டது. மன்மதனுடைய கி¡£டத்துக்கு ஒப்பிடலாம் என்றால் அது (சிவ பெருமான் எரித்த போது) சாய்ந்து விழுந்தது. சக்ர வாள கிரி போல, தேவ லோகம் அண்ட கோளம் இவைகளை எட்டும்படி நிமிர்ந்து எழுந்து, பெரிய தவசிகளும் தரும நெறியைக் கைவிட்டு நிலை குலைய, பூரணமாகத் திரண்ட குடத்தையும் வென்று, குளிர்ந்த சந்தனக் கலவையை அணிந்து, காமப் போரை விரும்பும் மார்பகங்களை உடைய விலைமாதர்களின் இன்பப் படுக்கையை விட்டு நீங்கி, உனது கூத்துக்கு இயன்ற திருவடியை வணங்கி, அதைப் பூஜிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் வருமோ? வேதங்கள் முழங்குகின்ற ஆயிரக் கணக்கான மடங்களும், தவங்கள் வேள்விச் சாலைகள் விளங்குகின்ற நிறைவான வீதிகளும், பல கிளைகளாகப் பரந்து வரும், நூபுரம் ஒலிக்கும் ஆகாய கங்கையாகிய சிலம்பாறு அமைதியாக வந்து ததும்பி ஒலிக்கும் படித்துறைகளும் பொருந்த, தோரணங்கள் அசையும் உயர்ந்த கோபுரங்களும், நெருங்கி நின்று சூழ்ந்துள்ள முத்து மணிகள் பதித்த பொலிவுள்ள மண்டபங்களும், சூரியனைப் போல சோதி மிகுந்த அழகிய பொன் மாளிகைகளும் விளங்கும் சோலை மலையில் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.
* நூபுரம் இரங்கு கங்கை - சிலம்பாறு பாயும் தென்திருமாலிருஞ் சோலையைக் குறிக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1312 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, ஒப்பிடலாம், என்றால், தானதன, வந்து, விழுந்தது, நூபுரம், சிலம்பாறு, ஒலிக்கும், பெரிய, பெருமாளே, ஆயிர, கின்ற, கங்கை, மிகுந்த, விளங்குகின்ற, மார்பகங்களை