பாடல் 1310 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் -
ஸிம்மேந்திரமத்யமம்
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று ...... தெருவூடே வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல் வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு ...... புரிவாயே சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று ளாடல்புரி யீசர் தந்தை ...... களிகூர ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1310 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தை, தந்த, தானதன, சம்பாதித்த, பெருமாளே, பொருள், மிகுந்த, வந்த, உள்ள, மனம், கந்த, வந்து, மீது, மாயவினை, வாழ்வு, தகிட, மேவு