பாடல் 1310 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் -
ஸிம்மேந்திரமத்யமம்
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று ...... தெருவூடே வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல் வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு ...... புரிவாயே சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று ளாடல்புரி யீசர் தந்தை ...... களிகூர ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே. |
நற்குணவதியான தாய், தகப்பன், மனைவி, வீடு, மக்கள், சம்பாதித்த பொருள் இவைகளின் மேல் ஆசையால் மனம் தடுமாற்றத்தை அடைந்து, கெடுதலைத் தருவதான மயக்கத்தில் வீழ்ந்து, இந்த வாழ்வே நிரந்தரமாக இருக்கும் என்று எண்ணி தேடிச் சம்பாதித்த பொருள் அத்தனையும் தொலைந்து போகும்படியாக, நடுத்தெருவில் இளம் வயதுள்ளவர்களாக, மார்பகம் மலைபோன்றும், நெற்றி பிறைச்சந்திரனைப் போலவும் உள்ள பொது மகளிரின் மீது மோகத்தால் அடியேனது மனம் நோகாமல், என்றும் வாழ்கின்ற மயிலின் மிசை நீ வந்து உன் பாத கமலங்களில் பணிகின்ற எந்தன் மாயவினை அழியும்படியாக அருள் புரிவாயாக. சேல் மீன்கள் மிகுந்த நாடு, அன்னங்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மதில்கள் வானிலுள்ள நிலவை எட்டும் செம்பொன்னாலான மணிமேடைகள் இவையெல்லாம் கூடிய இந்திரபுரி போன்றது எங்கள் ஊர் என்று சொல்லும்படி மகிழ்ச்சியான வாழ்வு கொண்டிருந்த ¨தரியம் மிகுந்த சூரனைவென்ற வலிமை மிக்க வீரனே, ஆலகால விஷத்தை உண்ட நீலத் தழும்பு உள்ள கண்டத்தை உடையவரும், நீண்ட கனகசபையில் அழகுடன் நடனம் புரிகின்றவரும் ஆகிய பரமேசுவரனாம் உனது தந்தை மகிழ்ச்சி மிகவும் அடையும்படியாக சிறந்ததான உபதேச மொழியை உபதேசித்து பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் கந்தனே, ஆதி முதல்வனாக வந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1310 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தை, தந்த, தானதன, சம்பாதித்த, பெருமாளே, பொருள், மிகுந்த, வந்த, உள்ள, மனம், கந்த, வந்து, மீது, மாயவினை, வாழ்வு, தகிட, மேவு