பாடல் 131 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதனத் தானனத் ...... தனதான |
கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற் கயல்விழிப் பார்வையிற் ...... பொருள்பேசிக் கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற் கலதியிட் டேயழைத் ...... தணையூடே செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற் றிறமளித் தேபொருட் ...... பறிமாதர் செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச் சிவபதத் தேபதித் ...... தருள்வாயே திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச் சிறிதருட் டேவருட் ...... புதல்வோனே திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத் திருடர்கெட் டோடவிட் ...... டிடும்வேலா பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற் படியினிட் டேகுரக் ...... கினமாடும் பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப் பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 131 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், தானனத், நல்ல, பெருமாளே