பாடல் 130 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான |
கரிய மேகம தோஇரு ளோகுழல் அரிய பூரண மாமதி யோமுகம் கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ கமுகு தானிக ரோவளை யோகளம் அரிய மாமல ரோதுளி ரோகரம் கனக மேரது வோகுட மோமுலை ...... மொழிதேனோ கருணை மால்துயி லாலிலை யோவயி றிடைய தீரொரு நூலது வோவென கனக மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி கசட னாய்வய தாயொரு நூறுசெல் வதனின் மேலென தாவியை நீயிரு கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே திரிபு ராதிகள் நீறெழ வேமிக மதனை யேவிழி யால்விழ வேசெயும் சிவசொ ரூபம கேசுர னீடிய ...... தனயோனே சினம தாய்வரு சூரர்கள் வேரற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே பரிவு சேர்கம லாலய சீதன மருவு வார்திரு மாலரி நாரணர் பழைய மாயவர் மாதவ னார்திரு ...... மருகோனே பனக மாமணி தேவிக்ரு பாகரி குமர னேபதி னாலுல கோர்புகழ் பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே. |
* அமரர் = அமுதம் உண்டு சாவா நிலை பெற்றவர். வானவர் = புண்ணிய மிகுதியால் வான் உலகில் வாழ்பவர். தேவர் = எட்டு வசுக்கள், பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு ருத்திரர்கள், இரு அச்வனிகள் என்ற முப்பத்தி முத்தேவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 130 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, திருமால், பொன், அழகிய, மேல், ஆகிய, வந்த, உள்ளவர்கள், தாமரை, அருமையான, அமரர், மீதினி, அரிய, வானவர், முருகோனே, நிறமான, பெருமாளே, சிறந்த