பாடல் 1294 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கமாஸ்
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தான தனத்த ...... தனதான |
நாளு மிகுத்த ...... கசிவாகி ஞான நிருத்த ...... மதைநாடும் ஏழை தனக்கு ...... மநுபூதி ராசி தழைக்க ...... அருள்வாயே பூளை யெருக்கு ...... மதிநாக பூண ரளித்த ...... சிறியோனே வேளை தனக்கு ...... சிதமாக வேழ மழைத்த ...... பெருமாளே. |
நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய், உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக. பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச் சந்திரன், பாம்பு ஆகியவற்றை சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் அளித்த குழந்தையே, உனக்கு வேண்டிய சமயத்தில்* சமயோசிதமாக யானையாகக் கணபதியை வரவழைத்த பெருமாளே.
* வள்ளியை, யானையைக் காட்டி அச்சுறுத்தி, பின்பு ஆட்கொண்ட சாமர்த்தியம் கூறப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1294 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, தனக்கு