பாடல் 1258 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த ...... தனதான |
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலூர மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயி¡£ர்வார் மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும் த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச் சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே. |
* மடல் எழுதுதல் .. தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** தேசாங்க சூரன் = தசாங்க சூரன். அவனுடைய பத்து அங்கங்களாவன .. நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1258 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, போற்றுகின்றேன், போற்றி, சூரன், உனது, தானாந்த, தானந், தாத்த, மடல், தலைவியின், எழுதி, மணம், பத்து, பெருமாளே, கேட்ட, தேசாங்க, மேலே