பாடல் 120 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதான |
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு ...... மயலாலே நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால் நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த நினைவொடுமி றந்து ...... படலாமோ புலவினைய ளைந்து படுமணிக லந்து புதுமலர ணிந்த ...... கதிர்வேலா புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த பருமயில டைந்த ...... குகவீரா பணைபணிசி றந்த தரளமணி சிந்து பழநிமலை வந்த ...... பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.நிலவு, மன்மதன் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 120 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, டைந்த, ரும்பு, தந்த, மிகவும், மன்மதன், பெருமாளே, மகள், கொண்டு