பாடல் 1149 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தத்தாத் தானன தனதன தனதன தத்தாத் தானன தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான |
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள் பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங் கருகிய வினைமன துட்டாக் காதது சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே விதமது கரமுரல் மொட்டாற் சாடிய ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன் வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டா£க ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும் பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ் சததள அமளியை விட்டாற் றேறிய சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே தழைதரு குழைதரு பட்டாட் சாலவு மழகிய கலவிதெ விட்டாக் காதலி தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே. |
கதறிக் கதறிப் படிக்கின்ற சாத்திரங்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முடியாத ஒரு தீர்மானமான பொருள். பதைபதைத்துப் பேசும் சமய வாதிகளால் எட்ட முடியாத ஒரு பெரிய ஜோதிப் பொருள். பிறப்பு நீங்கும்படி நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் ஒழிந்த பெரியோர்களால் மட்டும் காணக்கூடும் என்று சொல்லப்படும் ஒப்பற்ற தனிப் பொருள். இருண்ட (அஞ்ஞான) தீச் செயல் எண்ணங்களைக் கொண்ட மனதைத் தீண்டாத பொருள். வேதங்கள் ஒன்றுபட்டு ஒரு திரண்ட உருவாக விளங்கும் பொருள். பிழை இல்லாமல் எல்லாவற்றையும் விட்டொழித்தால் வந்து கூடுகின்ற அரிய பொருளை நான் உணராமல், பலவிதமான வண்டுகள் ஒலிக்கும் மலர் அரும்புகளால் தாக்குகின்ற, ரதியின் கணவனான மன்மதன் என்ற பெயர் கொண்ட, துஷ்டனோடு தொழில் புரிகின்றவர்களாகிய வேசியர் தருகின்ற, இளமை நிரம்பிய, இரு தாமரைகளான, கஸ்தூரி அணிந்த, குவிந்த மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், வில்லைப் போன்ற நெற்றியில் தீட்டப்பட்டுள்ள சிறிய பொட்டினாலும், அம்பைப் போல கூரியதாய், தந்திரம் நிறைந்த, கண் வலையினாலும் நான் பாதிக்கப்படுவதால், என் உடலில் உள்ள இரத்தம், எலும்பு, தசை, தோல் முதலிய எல்லா தாதுக்களும் வருந்தலாமோ? மலர் போன்ற திருவடிகளில் கழலைக் கட்டுவதற்குக் கூட அவசியம் இல்லாத குழந்தையே, வேதங்கள் உன் அடிகளைத் தொழுவதற்கு, அவைகள் எட்ட முடியாத குரு மூர்த்தியே. உண்பாயாக என்று அழகிய மார்பகங்களை ஈந்து கார்த்திகைப் பெண்கள் அறுவரும் நாள்தோறும் பால் தந்து அன்பு கொள்ள, பல முகங்களைக் கொண்ட பெரிய ஆறாகிய கங்கைநதியின் இடையே இருந்த ஒப்பற்ற நீர்நிலையாகிய (சரவணப்) பொய்கையில் புழு முதலிய பிராணிகள் அணுக முடியாத பசுமையான இலைகள் படர்ந்துள்ளதும், நறு மணம் கொண்ட முள்ளும், தண்டும் உடைய தாமரை மலர் மீது தங்கி நீ வாழ்கின்ற நூறு இதழ்களால் அமைந்த படுக்கையை விட்டு எழுந்து, கங்கை ஆற்றிலிருந்து நீங்கி புறப்பட்டு, கடல் நீர் வற்றிக் குறுகவும், வணங்காமுடியாகிய சூரனும், பொன்மயமான சிறந்த கிரவுஞ்ச மலையும் தொளைபட்டுப் பொடிப் பொடியாகும்படி வென்ற தலைவனே, நீ கொடுத்த (கரும்புத்) தழையால் மனம் குழைந்த பட்டுப் போன்றவளும், மிகவும் அழகான சேர்க்கை இன்பத்தில் தெவிட்டாத ஆசை தந்த தலைவியுமாகிய வள்ளியின் தலைவனே, கால்கள் பூமியில் தோயாத தேவர்களின் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1149 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, பொருள், கொண்ட, முடியாத, மலர், தானன, தத்தாத், வேதங்கள், நான், தலைவனே, முதலிய, எட்ட, விட்டாற், சுருதிக, மொட்டாற், தம்பிரானே, பெரிய, ஒப்பற்ற