பாடல் 1116 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான |
உற்பா தப்பூ தக்கா யத்தே யொத்தோ டித்தத் ...... தியல்காலை உட்பூ ரித்தே சற்றே சற்றே யுக்கா ரித்தற் ...... புதனேரும் அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ லப்பா வித்துத் ...... திரிவேனுக் கப்பா சத்தா லெட்டா அப்பா லைப்போ தத்தைப் ...... புரிவாயே பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப் புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர் பொட்டா கக்குத் ...... தியவேலா முற்பா டப்பா டற்றா ருக்கோர் முட்கா டற்கப் ...... பொருளீவாய் முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
என்று தொடங்கும் பாடல்கள்.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
திருமுருகாற்றுப்படை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1116 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, புலவர், அப்புலவருக்கு, பெருமாளே, முத்தா, சற்றே, பொற்பார்