பாடல் 1106 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானனா தத்தனத் தானனா தத்தனத் தானனா தத்தனத் ...... தனதான |
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத் தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம் நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட் டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட் டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற் றோதநீ திப்பொருட் ...... டரவேணும் கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத் தானும்வே தக்குலத் ...... தயனாருங் கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப் போதுறா நிற்பஅக் ...... கொடிதான காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக் கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக் காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக் காமவேள் மைத்துனப் ...... பெருமாளே. |
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1106 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனா, தத்தனத், மன்மதனின், முருகன், கடலின், என்னும், பெருமாளே, நல்ல