பாடல் 1102 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தந்தனா தனதனந் ...... தனதான |
உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண் டுண்டுமே கலைகழன் ...... றயலாக உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன் பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ் சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத் திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ் சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன் கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங் கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக் கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங் கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன் றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந் தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே. |
தேவர்கள் (உண்ணும்) அமுதம் போன்றதும், கொவ்வைப் பழம் போலச் சிவந்ததுமான வாயிதழ் ஊறலாகிய அமுதத்தை மேலும் மேலும் பருகி, இடையணி கழன்று வேறுபட்டு விலகி விழ, கொப்பூழ் குளத்தில் விழுந்து சுகமாக முழுகி, அன்பு என்பதே இல்லாத பொது மகளிரோடு கலந்து சோர்வுற்று படுக்கையின் மேல், செம்பொன்னால் ஆகிய குடம் போன்ற மார்பின் மீதுள்ள ஆபரணங்கள் இடம் பெயர்ந்து விழ, ஒளி நிறைந்த கண்கள் செந்நிறம் கொண்டு கலக்கமுற, மதி போன்ற முகம் வேர்வை கொள்ளும்படியாகத் தழுவி, இன்பக் கடலிலே விழுந்து அமிழும் எண்ணம் உடையவனாகிய நான் என்ன விதமாக நற்கதியை அடைவேன்? தந்தங்கள் நான்கினைக் கொண்டதும்* வெண்ணிறமான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன், இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம் போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன் பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும், தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே, கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும், மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள் அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும், அங்கங்களைக் கொண்ட நாலு வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே.
* ஐராவதம் என்னும் யானைக்கு நான்கு தந்தங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1102 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனா, தனதனந், போன்றதும், தந்தங்கள், பெரிய, போன்றதுமான, கொண்டு, மேலும், பெருமாளே, தேவர்கள், விழுந்து, குடம்