பாடல் 107 - பழநி - திருப்புகழ்

ராகம் - சக்ரவாஹம்; தாளம் -
அங்கதாளம் - 8 - எடுப்பு 1/2 தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதான தந்தனத் ...... தனதான தனதான தந்தனத் ...... தனதான |
அபகார நிந்தைபட் ...... டுழலாதே அறியாத வஞ்சரைக் ...... குறியாதே உபதேச மந்திரப் ...... பொருளாலே உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ இபமாமு கன்தனக் ...... கிளையோனே இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா திருவாவி னன்குடிப் ...... பெருமாளே. |
பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும், நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்) உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த* நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே.
* முருகனிடமிருந்து ஜெபமாலையை பெற்ற நிகழ்ச்சி அருணகிரியார் வாழ்வில் நடைபெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 107 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, என்னும், பெருமாளே, அறியாத, தந்தனத், உபதேச