பாடல் 107 - பழநி - திருப்புகழ்

ராகம் - சக்ரவாஹம்; தாளம் -
அங்கதாளம் - 8 - எடுப்பு 1/2 தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதான தந்தனத் ...... தனதான தனதான தந்தனத் ...... தனதான |
அபகார நிந்தைபட் ...... டுழலாதே அறியாத வஞ்சரைக் ...... குறியாதே உபதேச மந்திரப் ...... பொருளாலே உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ இபமாமு கன்தனக் ...... கிளையோனே இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா திருவாவி னன்குடிப் ...... பெருமாளே. |
* முருகனிடமிருந்து ஜெபமாலையை பெற்ற நிகழ்ச்சி அருணகிரியார் வாழ்வில் நடைபெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 107 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, என்னும், பெருமாளே, அறியாத, தந்தனத், உபதேச