பாடல் 1042 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்
ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான |
வாராய் பேதாய் கேளாய் நீதாய் மானார் மோகத் ...... துடனாசை மாசூ டாடா தூடே பாராய் மாறா ஞானச் ...... சுடர்தானின் றாரா யாதே யாராய் பேறாம் ஆனா வேதப் ...... பொருள்காணென் றாள்வாய் நீதா னாதா பார்மீ தார்வே றாள்கைக் ...... குரியார்தாம் தோரா வானோர் சேனா தாரா சூரா சாரற் ...... புனமாது தோள்தோய் தோளீ ராறா மாசூர் தூளாய் வீழச் ...... சிறுதாரைச் சீரா வாலே வாளா லேவே லாலே சேதித் ...... திடும்வீரா சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. |
ஏ பேதை மனமே, வருவாயாக, நான் சொல்லுவதைக் கேட்பாயாக. நீ தாவித் தாவி மாதர்கள் மீது கொண்டுள்ள மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல், உனக்குள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக. மாறாத ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை ஆராய்வதுபோல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக. பெறத்தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப் பொருளைக் கண்டு கொள் என்று எனக்கு உணர்த்தி என்னை ஆள்வாயாக. நீ தான் என் தலைவனே, இந்தப் பூமியில் உன்னை அன்றி வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உளர்? தோல்வியே அறியாதவனும், தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவனுமான சேனாதிபதியே, சூரனே, (வள்ளி) மலையில் தினைப் புனத்தில் இருந்த வள்ளியின் தோளை அணைந்த, பன்னிரு தோள்களை உடையவனே, பெரிய சூரன் பொடிபட்டு விழ, சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரனே, சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, அரசனே, தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1042 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, தான், பெரிய, என்னை, ஆராய்ந்து, வேதப், பெருமாளே, பார்ப்பாயாக