சேவல் விருத்தம் - காப்பு
காப்பு
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற் செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான் திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே (முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே) |
பூங்கொத்துக்கள் சூடியுள்ள கூந்தலில், இசை பாடும் வண்டினங்கள், ரீங்காரம் செய்யும், அந்த இலக்கணத்திற்கு நிகராகவும் (அதே போல்), சங்கீதத்தில் வரும் 'ஸ ரி க ம ப த நி' என்கின்ற ஏழு சுரங்களும் தோற்று பின் வாங்கவும், மழலைச் சொற்கள் பேசி அடியவர்களுக்கு அருள் புரியும் பொன் நிற வடிவினள், எவரிடத்தும் வசப்படாமல் தன்னிச்சையாக செயல் படுபவள் ஆகிய உமா தேவியின், குமாரனாகிய முருகக் கடவுள் (வீற்றிருக்கும்), நன்மைகளைத் தரும், அழகான, தாமரைக் காடுகளும், அழியாத சோலைகளும் உள்ள, திருச்செந்தூர், மற்ற பல தலங்களிலும் குடிகொண்டு உள்ள குமார மூர்த்தியின், சிறப்பு வாய்ந்த (திலகம் போன்ற) மயில் வாகனத்தில் வரும் முருகப் பெருமானின், சிறப்பு வாய்ந்த, சேவலை நான் துதித்து பாடுவதற்கு, எதிர்த்து போருக்கு வந்த, மதம் பிடித்த, கஜமுகமாசுரனை கொன்று, தனது வலிமை பொருந்திய ஒரு தந்தத்தை ஒடித்து, பாரதக் கதையை மேரு மலையில் வைத்து எழுதினவரும், பசுமையான அன்று பூத்த பல மலர் மாலைகளைக் கொண்டு ராவணன் வழிபட்டு பூஜை செய்த சிவ லிங்கம் ஆன மஹாபலேஸ்வரரை, கோகர்ணத்தில் பூமியில் வைத்த, கணபதியாகிய, மூன்று கண்களை உடைய பரம தெய்வம் எனக்கு துணை புரியட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - காப்பு - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பரமன், துணையாமே, வரும், சிறப்பு, வாய்ந்த, உள்ள, முக்கட், ராவணன், லிங்கம், வைத்த, வினாயகன், குமரன்