மயில் விருத்தம் - காப்பு - மயில் விருத்தம்
நாட்டை - ஆதி 2 களை
சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும் கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும் கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய் கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத் எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே (கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே) |
சந்தனம், குங்குமப் பூ, குங்குமம் இவைகள் பூசப் பட்டதும், மகிழ்ச்சியை ஊட்டுவதும், சண்பக மாலையை சூடியுள்ளதும், வீர வளைகள் அணிந்துள்ளதுமான, திருத் தோள்களை உடைய, போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவனே, குமாரக் கடவுளே, ஆறுமுகத்தோனே, குரா மலர்களை அணிந்துள்ள, கூந்தல் பாரத்தை உடைய, வேடர்குலத்தில் பிறந்த பழையவளாகிய வள்ளிப் பிராட்டியின் கணவா, என்றும் புகழப்படும், சரவணப் பொய்கையில் உதித்தவனே, யானையால் வளர்க்கப்பட்டு, தளிர்போன்று அழகுடைய தேவயானையைத் தழுவி அணைப்பவனே, கந்தக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவனே, அழகான குடம் போன்ற கபோலத்தை உடையவரும், மகிழ்ச்சியை ஊட்டும் துதிக்கையை உடையவரும், சவரி போன்ற விசாலமான காதுகளை உடையவரும், அகன்ற கன்னத்தில் மத நீர் பெருக்கை உடையவரும் எனக்கு தந்தை போன்றவரும், பெரு வயிறு உடையவரும், மூஷிகத்தை வாகனமாக உடையவரும், செந்தாமரை போன்ற முகத்தை உடையவரும், சிவ குமாரனாகிய கணபதி, விக்னங்களை அகற்றும் விநாயகர் ஆகிய, தெய்வத்திற்கு சகோதரனே, கூதாள மலர் அணிந்துள்ள குளிர்ச்சி பொருந்திய உனது திரு அடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காப்பு - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவரும், சகோதரனே, தெய்வ, கடவுளே, அணிந்துள்ள, வாகனமாக, மகிழ்ச்சியை, கனபதி, வினாயக, சண்பக, உடைய