கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
அமரும் பதிதே ளகமா மெனுமிப் பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே. |
8 |
குமாரக் கடவுள், மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன், போருக்கு வந்த சூரர்களை அழித்தவன், நான் பிறந்த ஊர், உறவினர்கள், நான் தான் எனப்படும், இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய, மெய்ப் பொருள் பேசியது என்ன ஆச்சரியம். ..
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் திட்டூர நிராகுல நிர்ப் பயனே. |
9 |
கிரவுஞ்ச கிரியின் மீது, தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி வேலாயுத்தை ஏவி, அழித்தவனே, துன்பம் இல்லாதவனே, பயமற்றவனே, தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய, பெண்களது, மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற தன்மையை, எப்போது நீங்கப் பெறுவேன்? ..
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. |
10 |
மலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய பொன்னுலகை அழித்த, சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலாயுதக் கடவுளே, கரிய எருமையின் மீது, காலன் வரும்போது, அழகிய தோகையை உடைய மயில் வாகனத்தில் எழுந்தருளி, அடியேன் எதிரே வந்தருள்வீராக ..
கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா தாகாசல வேலவ நாலு கவித் தியாகா கரலோக சிகா மணியே. |
11 |
திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலாயுதக் கடவுளே, நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, இறந்து போகாத வண்ணம், உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கடவுளே, கூகா, நாலு, வேலாயுதக், அழித்த, நான், மீது, உடைய, பொருள்