கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான் தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால் தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத் தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே. |
77 |
தேவர்கள் கூடி நிர்மாணித்து கொடுத்த ரதத்தை, அச்சு முறியும்படி பண்ணி, திருமாலாகிய ரிஷபத்தில் ஏறி, திரிபுரங்களையும் சிரித்து அழித்த, பெருமானாகிய சிவனுக்கு, பிரணவப் பொருள் தெரியும்படி உபதேசித்த, சுவாமியே, சொல்லத் தகும், தேவர்களைத் துன்புறுத்தி சிறையிலிட்ட குற்றத்தை, தரித்திருந்த, சூரனை அழித்தவனே, என்று துதித்து பாடுங்கள், காம இச்சையால் விலைமகளிரிடம் சென்று, தவளையானது, விஷப் பாம்பின், வாயில் சிக்கிக் கொண்டது போல, அந்த பரத்தையர்களின் வலையில் சிக்கிக் கொண்டு, பேய்த் தேரையாகிய கானல் நீரை, ஊறுகின்ற ஜலமானது, பக்கத்தில் இருக்கிறது என்று நினைத்து ஓடி ஓடிப் போய் வருத்தப்படுகின்ற மக்களே. ..
திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத் திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத் திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே. |
78 |
எப்போதும் திரிவாயாக, கடல் சூழ்ந்த, உலகை சிருஷ்டிக்குமாறு, பூர நாளில் அவதரித்த பார்வதி தேவியை, தனது உள்பாகமாகிய இடது கையால் மேருவாகிய வில்லைப் பிடிக்கச் செய்து, திரிபுரங்களின் மேல், விஷ்ணுவாகிய பாணத்தை, பிரயோகம் செய்யும் பொருட்டு, தனது பாகம் ஆகிய வலது கையால் ஏற்றிட்ட, மகா வீரனாகிய பரமசிவனின், திருச்செங்கோட்டு மலையை வாசஸ்தலமாகக் கொண்ட, அந்த சாமர்த்தியசாலியான மைந்தனே, திருமாலின் மருகனே, திருக்கை என்னும் மீன் இனங்கள் வாழும், சமுத்திரத்தில், பகைவர்களாகிய அசுரர்களின் ரத்தத்தையே புதிய உறையாகக் கொண்ட, வேலாயுதனே, என்று புகழ்ந்து கொண்டு ஏ நெஞ்சமே என்றும் திரிவாயாக). ..
செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண் செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன் செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே. |
79 |
பேசுகின்ற மொழி, இனிய அமுதம் போன்றது, இருண்ட நிறமும், அழகும், நிலை பெற்றிருக்கும், கூந்தல், மேகம் போன்றது, தென்னங் குரும்பை போன்ற தனபாரம், சிமிழைப் போன்றது, முத்துக்கள் நிறைந்த, பழமையான சமுத்திரம் போன்றது, இவளுடைய கண், ஓளிவீசுகின்ற பல் வரிசை, மயில் இறக்கையின் அடிப்பாகம் போன்றது, நான்கு கண்களை உடைய, சிவந்த பெரிய முதலை (யின் வாயில் சிக்கிய), (கஜேந்திரனைக் காப்பாற்றும்பொருட்டு) தடாகத்திற்கு, விரைந்து சென்ற திருமாலின் மருகனும், தன்னை மிகவும் புகழ்ந்து பாடியவர்களின், பிறப்பிற்கு மூலமான வினைத்தொகையை, அடியோடு நிர் மூலமாக்கும் கந்தக் கடவுளின், மலையில் வாழும், இந்தச் சிறந்த பெண்ணிற்கு. ..
சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச் சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற் சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச் சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே. |
80 |
லட்சுமி நாயகனாகிய, அழகான, திருமாலே, பரம சிவனே, உங்கள் சென்னிக்கு, அழகாக அமைந்திருக்கின்றன, கங்கா ஜலமும், சரப் பாபரணமும், தேன்விளங்கும் துளசி மாலையும், என்று உலகில் சொல்லுவார்கள், தெள்ளிய அலைகளை உடைய கடலின்கண், மா மரமாய் நின்ற சூரபத்மாவின், மார்பைத் துளைக்கும்படி, உடை வாளை, பிரயோகித்த, குமாரக்கடவுளின் திருவடிகளுக்கு, அணிகலமாக அமைந்திருப்பவை, நெருங்கிய, நிலை பெற்ற, தேவர்களின், கி¡£டமணிந்த, தலைகளின் வட்ட வடிவமான வரிசைகளே. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போன்றது, ரமுதலை, செப்பா, தேரை, திரிபுரத், சீராம, தப்புத், விடப்பணி, புகழ்ந்து, சென்ற, வாழும், நிலை, உடைய, கையால், அந்த, சிக்கிக், வாயில், கொண்டு, திரிவாயாக, கொண்ட, தனது, திருமாலின்