தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
யாரிடம் கேட்கலாம்?
ஒவ்வொரு அரசுத்துறை அலுவலகத்திலும் ஒரு “பொதுத் தகவல் அலுவலர்” ஒரு மேல் முறையீட்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் கோருபவர் – பொதுத் தகவல் அலுவலரிடம் மனு செய்யலாம்.
விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும்?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணை பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத் தகவல் அலுவலர் – விண்ணப்பங்களை நிரப்புவதற்கும், மேல்முறையீடுகளை செய்வதற்கும் மனுதாரருக்கு உதவி செய்ய வேண்டும். வாய்மொழி விண்ணப்பங்களை எழுத்து வடிவில் மாற்றவும் இரு அதிகாரிகளும் உதவி செய்ய வேண்டும். உடல் ஊனமுற்ற்வர்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்து தர வேண்டும்.
தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசுத்துறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தமிழிலேயே விண்ணப்பிக்கலாம். அதற்கு பொதுத் தகவல் அலுவலர் தமிழிலேயே பதில் தர வேண்டும். டெல்லியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு தமிழிலும் விண்ணப்பம் அனுப்பலாம். ஆனால் டெல்லிக்கு ஆங்கிலத்தில் அனுப்புவது நல்லது.
தபாலில் அனுப்பும் முறை
விண்ணப்பங்களை சாதாரண தபாலிலேயே அனுப்பலாம். ஆனால், பதிவுத் தபாலில் அனுப்புவதே நல்லது. அப்போது அதிகாரிகள் விண்ணப்பம் வரவில்லை என ஏமாற்ற வாய்ப்பிருக்காது.
அஞசல் உறை மீது விலாசம் எழுதும்போது, அனுப்பப்படும் அதிகாரியின் பதவியின் பெயர், அவரது அலுவலகத்தின் பெயர், முகவரி மட்டும் எழுதினால் போதும். அவ்வாறு அனுப்பும்போது அதிகாரிகளால் மனுவை திருப்பி அனுப்ப முடியாது.
நீங்கள் மனுக்கள் அனுப்பியதற்கு சான்று இருந்தால் மட்டும் போதாது. சம்மந்தப்பட்ட அலுவலர் அதைப் பெற்றுக்கொண்டார் என்பதற்கான ஒப்புதல் சீட்டே முக்கிய ஆதாரமாகும். அது இல்லை என்றால் மேல் முறையீடுகள் எடுபடாமல் போக வாய்ப்புண்டு.
முகவரிகள் தெரியவில்லையா?
நாம் அரசிடம் எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.08 தேதியிட்ட (அரசாணை எண் 114) சொல்கிறது. அதன்படி நாம் கொடுத்த மனுவிற்கு பதில் தரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பற்றிய காரணங்களைக் கேட்கலாம். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பரிந்துரைத்த அதிகாரியின் அறிக்கை நகல், வாக்குமூலங்களின் நகல்களைக் கேட்கலாம்.
மாநில அரசு : நீங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்ட்த்தில் மாநில அரசு அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும்போது எந்த அலுவலகத்துக்கு அனுப்புவது என்று தெரியவில்லையா? அதற்காக கவலைப்பட வேண்டாம். தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அங்குள்ள அதிகாரி அவருக்கு சம்மந்தப்பட்டதல்ல என்றால் பிரிவு 6 (3)ன் படி உரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுப்பிய தகவல் உங்களுக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு : அதேபோல் முகவரி தெரிந்தால் மத்திய அரசு அலுவலகங்களுக்கு நேரிடையாக அனுப்பலாம். சம்மந்தப்பட்ட அலுவலகம் எது என்று தெரியாவிட்டால் மட்டும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
பெறுநர் :
மத்திய பொது தகவல் அலுவலர் அவர்கள்,
தகவல் பெறும் உரிமை சட்டம் – 2005,
ஊர் ................................. பின்கோடு ......................
மேற்படி காலியாக உள்ள இடத்தில் உங்கள் ஊருக்கு சம்மந்தப்பட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் இருக்கும் ஊரின் பெயரை தங்கள் பகுதி தபால்காரரிடம் கேட்டு எழுதி விடுங்கள்.
மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பக்கட்டணம் செலுத்தி ரசீது பெற்றும் அனுப்பலாம். தபால் செலவு இல்லை.
மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் முதல் மேல்முறையீட்டு முகவரி தெரியாவிட்டால் உங்கள் விண்ணப்பத்தில்
பெறுநர் :
மத்திய பொதுத் தகவல் அலுவலர் மற்றும்
மேல் முறையீட்டு அலுவலர்,
தகவல் பெறும்உரிமைச்சட்டம் – 2005
அஞ்சலகங்களின் இயக்குனர்
சென்னை / கோவை / திருச்சி / மதுரை
(நான்கில் பொருந்தும் ஊர் பெயர் மட்டும் குறிப்பிட வேண்டும்) உறை மீதும் இதே விலாசம்தான் எழுதி அனுப்ப வேண்டும்.
இரண்டாவது மேல் முறையீடு : டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
To
CENTRAL INFORMATION COMMISSION,
IInd floor, August Kranti Bhavan,
Bhikaji Cama Place, New Delhi – 110 066.
Phone No . 011-2616 1137 Fax : 01126186536 www.cic.gov.in
அஞ்சல் உறை மீது இதே விலாசத்தை எழுதவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், சட்டம், வேண்டும், அலுவலர், உரிமைச், மத்திய, அரசு, பொதுத், பெறும், மட்டும், அறியும், மேல், சம்மந்தப்பட்ட, அனுப்பலாம், பெயர், information, நோக்கங்கள், முகவரி, அலுவலகத்திற்கு, உரிய, அலுவலகங்களுக்கு, அனுப்ப, சட்டத்தின், தமிழிலேயே, விண்ணப்பங்களை, கேட்கலாம், விண்ணப்பம், அஞ்சல், இந்தியச், தலைமை, உங்கள், தெரியவில்லையா, இல்லை, எழுதி, நீங்கள், நாம், என்றால், பெறுநர், மாவட்ட, அலுவலகத்துக்கு, | , மாநில, தெரிவிக்க, நாட்களுக்குள், தெரியாவிட்டால், அலுவலகம், உள்ள, தமிழக, code, ஒவ்வொரு, அரசுத்துறை, அலுவலகத்திலும், penal, indian, right, இந்திய, தண்டனைச், inidan, முறையீட்டு, மனுதாரருக்கு, அனுப்புவது, நல்லது, தபாலில், மீது, பதில், விண்ணப்பிக்கலாம், உதவி, செய்ய, செய்து, அதிகாரியின்