விஜயநகர் அரசு
சங்கம மரபைச் சேர்ந்த ஹரிஹரரும் புக்கரும் 1336ஆம் ஆண்டு விஜய நகரத்தை நிறுவினர். ஏற்கனவே, அவர்கள் வாரங்கல் ஆட்சியாளர்களான காகதீயர்களிடம் பணியாற்றி வந்தனர். பிறகு காம்பிலிக்கு சென்றனர். அங்கு முஸ்லிம் படையெடுப்பாளர்களால் சிறைப்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், வித்யாரண்யர் என்பவரின் முயற்சியால் இந்து சமயத்திற்கு திரும்பினர். தங்களது சுதந்திரத்தை அறிவித்துக்கொண்ட அவர்கள் துங்கபத்திரை நதியின் தென்கரையில் ஒரு புதிய நகரத்தை நிறுவினர். வெற்றி நகரம் என்ற பொருள்கொண்ட விஜயநகரம் என்று அது வழங்கப்பட்டது.
விஜயநகர் அரசு |
விஜயநகர பேரரசுக்கும் பாமினி அரசுக்கும் இடையிலான பூசலும் பல ஆண்டுகள் நீடித்தன. கிருஷ்ணா, துங்கபத்திரா நதிகளுக்கிடையிலான பகுதியான ரெய்ச்சூர், தோஆப் பகுதியை கட்டுப்படுத்துவதும், கிருஷ்ணா, கோதாவரி டெல்டாவின் வளமான நிலங்களைக் கைப்பற்றுவதும் இம்மோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தன. சங்கம மரபின் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர். ஆனால், அவரால்கூட பாமினி சுல்தான்களை முழுவதுமாக வெற்றிகொள்ள இயலவில்லை. அவரது மறைவுக்குப்பிறகு சங்கம மரபு வலிமையிழந்தது. அடுத்ததாக சாளுவநரசிம்மர் சாளுவ மரபைத் தோற்றுவித்தார். இந்த மரபு மிகவும் குறுகிய காலமே (1486 - 1509) ஆட்சியிலிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஜயநகர் அரசு , வரலாறு, இந்திய, அரசு, விஜயநகர், சங்கம, மதுரை, ஹோய்சள, மரபு, இடையிலான, கிருஷ்ணா, பாமினி, தங்களது, விஜய, ஹரிஹரரும், இந்தியா, புக்கரும், ஆண்டு, நிறுவினர், நகரத்தை, சமயத்திற்கு