1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்
அயோத்திக்கு அருகிலிருந்த ஜக்தீஷ்பூரின் ஜமீன்தார் கன்வர்சிங் பிரிட்டிஷ் ஆட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். பீகாரில் நடைபெற்ற கலகத்தை வழிநடத்தியவர் இவரேயாவார், பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த இவர் ஜக்தீஷ்பூரில் 1858 ஏப்ரல் 27ல் இறந்தார்.
இறுதியாக, 1857 ஆண்டு கலகம் ஒடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் வெற்றி பெற்றனர். அரசப் பிரதிநிதி கானிங் பிரபு இந்தியா முழுவதும் அமைதியை அறிவித்தார்.
கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்
இக்கலகத்தின் தோல்விக்கு தலையாய காரணம், ஒட்டுமொத்த இந்தியாவும் பங்கெடுக்கவில்லை என்பதாகும். சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரான, வட்டிக்கு கடன் கொடுப்போர் (ஆஆஅ) வியாபாரிகள், படித்த இந்தியர்கள் ஆகியோர் இக்கலகத்தை ஆதரிக்க வில்லை. அறிவு ஜீவிகள் இக்கலகத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் பிரிட்டிஷ் பேரரசின் வலிமை கலகக்காரர்களைவிட பன்மடங்கு அதிகமாகும். அதேபோல், கிளர்ச்சியாளர்களிடம் ஒரு பொதுவான திட்டமோ அல்லது திட்டம் வகுத்து செயல்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு மத்திய அமைப்போ காணப்படவில்லை.
மாறாக, பிரிட்டிஷாரிடம் நல்ல போர்த் தளவாடங்கள் இருந்தன. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளான தந்திமுறை, அஞ்சல் தொடர்புகள் அவர்களுக்கு கலகத்தை அடக்குவதற்கு பேருதவியாக இருந்தன. இதனால், பிரிட்டிஷார் இந்தியாவின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பு கொள்ளவும் துருப்புக்களை தேவைக்கேற்ப ஆங்காங்கே உடனுடக்குடன் அனுப்பி வைக்கவும் ஏதுவாக இருந்தது. இத்தகைய காரணங்களால் 1857 ஆம் ஆண்டு கலகம் தோல்வியடைந்தது. பிரிட்டிஷார் வெற்றி பெற்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரலாறு, ஆண்டு, இந்திய, இந்தியா, பெருங்கலகம், பிரிட்டிஷார், வெற்றி, இருந்தன, பெற்றனர், பிரிட்டிஷ், இந்தியாவின், கலகத்தை, கலகம்