');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
கான்பூர்
|
தாந்தியா தோப் |
கடைசி பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் புதல்வரான நானா சாகிப் கான்பூரில் நடைபெற்ற கலகத்துக்கு தலைமையேற்றார். அங்கிருந்த ஆங்கிலேயரை விரட்டியடித்து விட்டு தம்மை பேஷ்வாவாக அறி வித்துக் கொண்டார். நானா சாகிப்புக்கு பக்கபலமாக தாந்தியா தோப் மற்றும் அசிமுல்லா என்ற இருவரும் இருந்தனர். 1857 ஜூன் 27 அன்று
|
நானா சாகிப் |
கான்பூர் படைப்பிரிவின் பிரிட்டிஷ் தளபதி சர் ஷோ வீலர் கலகக்காரர்களிடம் சரணடைந்தார். ஆனால் பிரிட்டிஷ் தளபதி சர்காலின் காம்ப்பெல் என்பவரால் கான்பூர் விரைவில் மீட்கப்பட்டது.
லக்னோ
|
அயோத்தி பேகம் |
லக்னோவில் நடைபெற்ற கலகத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது அயோத்தி பேகம் ஆவார். சிப்பாய்கள், ஜமீன்தார்கள், குடியானவர் கள் ஆகியோரின் உதவியோடு, அயோத்தி பேகம் பிரிட்டிஷாருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார். முதன்மை ஆணையர் ஹென்றி லாரன்ஸ் பிரிட்டிஷாரைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் நடைபெற்ற மோதலின்போது ஓரு வெடி விபத்தில் அவர் கொல்லப்பட்டார். சர் காலின் கேம்ப்பெல் லக்னோவிற்கு விரைந்து வந்து கலகத்தை ஒடுக்கி பிரிட்டிஷ் துருப்புக்களை விடுவித்தார்.
|
ராணி லட்சுமிபாய் |
ஜான்சி
ஜான்சியைச் சேர்ந்த கங்காதர்ராவின் விதவையான, ராணி லட்சுமிபாய் இக்கலகத்தில் பெரும்பங்கு வகித்தார். டல்ஹவுசியின் வாரிசு இழப்புக் கொள்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் ராணி லட்சுமிபாய். தாந்தியா தோப் அவருடன் சேர்ந்து கொண்டார். ராணியும் தாந்தியா தோப்பும் சேர்ந்து குவாலியரைக் கைப்பற்றினர். ஆனால், 1858 ஏப்ரல் 3 ஆம் நாள் சர் ஹோ ரோஸ் தாந்தியா தோப்பை முறியடித்து ஜான்சியை வீழ்த்தினர். பின்னர், குவாலியரையும் கைப்பற்றினார். 1858 ஜூன் 17 ல் ஜான்சி ராணி போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தார். தாந்தியா தோப் சிறைப்பிடிக்கப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டது மற்றும் கான்பூர் படுகொலை ஆகிய குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்.
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->