வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 96
“தற்செயலாக இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம்; நானும் யுத்தக்கலை
பயில்வதற்காக ஞானி அங்கிராவிடந்தான் போகிறேன்.”
“மிகுந்த சந்தோஷம் நண்ப! பாலமத்ர, கிழக்கிலிருக்கும் ஆரியர்களைப் பற்றி நீ ஒரு வார்த்தையும் கூறவில்லையே!”
“கிழக்கே ஆரியர்கள் நெருப்பைப் போல் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காந்தாரப் பிரதேசத்திற்கு அப்பால் மத்ரர்களாகிய எங்களுடைய பிரதேசம். அதற்கு அப்பால் உள்ளதை மல்லர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள். இதே மாதிரி குரு, பாஞ்சாலர் முதலிய நம்முடைய ஆரிய சமூகத்தார் ஆங்காங்கு பெரிய பெரிய பிரதேசங்களைத் தொடர்ந்து கைப்பற்றி வாழ்ந்து வருகிறார்கள்.”
“அப்படியானால் அங்கும் ஆரியர்கள் ஏராளமாயிருப்பார்கள்.”
“ரொம்ப அதிகம் என்று சொல்ல முடியாது. முன்னேறிச் செல்லச் செல்ல அசுரர்களையும் மற்றவர்களையும் அதிக அளவில் சந்திக்க முடிகிறது.”
“அசுரர்களைத் தவிர மற்றவர்கள் யார்?”
“அசுரர்கள், கொஞ்சம் சென்னிறங் கலந்த கறுப்பு நிறமாயிருக்கிறார்கள். கிழக்கே இருக்கும் மற்றொரு ஜாதியர் அடுப்புக்கரி போன்ற நிறத்தவர். அவர்களைக் கோல் ஜாதியார் என்று சொல்கிறார்கள். இந்தக் கோல் ஜாதியார் கிராமங்களிலும் வசிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் வனங்களில் மிருகங்களைப் போல வசிக்கிறார்கள். அவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் பெரும் பகுதி கற்களால் செய்தவைகள்.”
“அப்படியானால், ஆரியர்கள் ஆரியர்களல்லாதவரோடு மிகுந்தும்
போராட வேண்டியதேற்படுமே?”
“நேரடியான போராட்டம் இப்பொழுது மிகவும் குறைவு. நம்முடைய குதிரைகளைப் பார்த்தவுடனேயே அவர்கள் ஓட்டமெடுக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் அவர்கள் நம்முடைய கிராமங்களைத் தாக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனாலேயே அவர்கள் மீது நாம் மிகவும் குரூரமான முறையில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பொழுது அவர்கள் கிராமம் கிராமமாகக் காலி செய்து இன்னும் கிழக்குத் திசை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 96, புத்தகங்கள், பக்கம், நம்முடைய, ஆரியர்கள், இப்பொழுது, வால்காவிலிருந்து, கங்கை, பெரிய, “அப்படியானால், ஜாதியார், மிகவும், வசிக்கிறார்கள், கோல், இந்தக், அவர், ஆரிய, புராதனக், கலைப், முறையில், சிறந்த, அப்பால்