வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 84
எங்கும் மதுவின் நதி பெருக்கெடுத்தது. மாமிசமும் மதுவும் வயிற்றை நிரப்பியதும் யுவ யுவதிகளின் காதல் வெறி தலைவிரித்தாடிற்று. எங்கு பார்த்தாலும் ஜோடிகளின் நாட்டியம். ஆம், இந்த இந்திர விழா இளங்காதலர்களின் திருவிழாதானே! இன்று பகலும் இரவும் அவர்களுக்கு எல்லாவிதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் பூரண விடுதலை உண்டு.
2
இந்த சுவாத நதிப் பிரதேசத்தில் ஆடு, மாடுகள், குதிரைகள், தான்யம் இவைகளுக்கு எவ்விதக் குறைவுமில்லை. செழிப்பு மிகுந்த பிரதேசம், ஆகையால் இங்கு வசிப்பவர்களும் சுகஜீவிகளாயிருந்தனர். இவ்வளவு வைபங்களுடன் வாழ்ந்தாலும், இவர்களிடத்திலும் சில பொருள்கள் குறைவாயிருந்தன. அவற்றில் முக்கியமானவை தாமிரம், தங்கம், வெள்ளி,
ரத்ன வகைகள். மேலும் இந்தப் பொருள்களின் தேவை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. சுவாதம், காபுல் இருநதிகளும் சங்கமமாகும் இடத்தில் இருக்கும் அசுர நகரத்திலிருந்து இந்தப் பொருள்கள் இவர்களுக்கு வரவேண்டும். பின்னால் ஆரியர்கள் இந்நகருக்குப் புஷ்கலாவதி என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஆகையால் நாமும் இந்நகரைப் புஷ்கலாவதி என்றே அழைப்போம். சுவாதம், பஞ்சகோரா முதலிய நதிக்கரைப் பிரதேசத்தில் வசிக்கும் புரு, குரு, காந்தாரர், மத்ரர், மல்லர், ஷிவி, உஷினர் முதலிய மலைஜாதி மக்கள் ஒவ்வொரு வருடமும் பனிக்கால மத்தியில், தங்களுடைய குதிரை, கம்பளம் முதலிய விற்கக் கூடிய பொருள்களை எடுத்துக் கொண்டு, புஷ்கலாவதி நகரத்திற்கு வெளியே உள்ள மைதானத்தில் வந்து கூடுவார்கள். அசுரகுல வியாபாரிகள் இவர்களுடைய பொருள்களை வாங்கிக் கொண்டு பதிலுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பார்கள். இவ்விதம் இவர்கள் பரிமாறிக் கொள்ளும் முறை எத்தனையோ வருஷங்களாக நன்கு நடை பெற்று வந்திருக்கிறது. ஆயினும் சமீப காலத்தில், தம்மை அசுர வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் இந்த மலைவாசிகளிடத்தில் பரவியிருந்தது. இவ்வருடம் புருதானனுடைய தலைமையில் இவர்களுடைய கோஷ்டி புஷ்கலாவதிக்கு, வியாபாரத்திற்காகச் சென்றது. அசுர நகர வியாபாரிகள், இந்த மலைவாசிகளைவிடத் திறமைசாலிகளென்பதில் சந்தேகமில்லை. மேலும் அசுர வியாபாரிகள் இந்த மலைவாசிகளை முட்டாள்தனமான காட்டுமிராண்டிகள் என்று கருதினர். இதில் ஓரளவு உண்மையுமிருந்தது. ஆனால் செம்பட்டை
மயிரும் நீலநிறக் கண்களையுமுடைய இந்த ஆரியக் குதிரைக்காரர்கள், தாங்கள் ‘அசுர நகரவாசிகளுக்குத்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 84, புத்தகங்கள், அசுர, வியாபாரிகள், பக்கம், புஷ்கலாவதி, வால்காவிலிருந்து, முதலிய, இந்திர, கொண்டு, கங்கை, சுவாதம், இந்தப், பொருள்களை, இவர்களுடைய, பிரதேசத்தில், காதல், சிறந்த, உண்டு, வந்தது, பொருள்கள், ஆகையால், மேலும்