வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 83
“இந்த மாதிரி வார்த்தைகள் உன் வாயிலிருந்து ஏன் வருகின்றன? நீ உயிரோடிருக்கும்போதே என்னை விதவையாக்கி விடாதே.”
“புருகுலத்தில் விதவையர்களை மணந்துகொள்ளும் புருஷர்களுக்கா பஞ்சம்?”
“ஏன்? சுமங்கலிகளுக்கும் மைத்துனர்கள் கசப்பதில்லையே?” என்று இடைமறித்தான் புருதானன்.
“சரியாகச் சொன்னாய் புருதானா. இப்பொழுது வந்துவிட்டாள், என்னை ஓட்டி மேய்க்க. வீட்டை விட்டுக் கிளம்பியவள் இந்நேரம் எங்கெங்கு சுற்றிவிட்டு வந்தாளோ! இனி மாலையில் பார்க்க வேண்டுமே! ஒருவன் என்னோடு நடனமாடென்பான்; மற்றொருவன் என்னுடனென்பான். அவர்களுக்குள் சண்டையும் கலகமும் ஏற்படும். கெட்ட பெயர் என் தலையில் வந்து விடியும்” என்று வெறுப்போடு கூறினான் சுமேதன்.
உடனே அவனுடைய கைகளை உதறிவிட்டு, கோபம் கக்கும் விழிகளால் அவனை நோக்கி, “நீ என்னை மூட்டையாகக் கட்டி முதுகிலே வைத்துக் கொள்ள நினைக்கிறாயா” அப்படியானால் உன்னுடைய வழியை நீ பார். என்னுடைய வழியிலே நான் செல்கிறேன்” என்று கூறி விட்டுக் கூட்டத்திலே சென்று மறைந்தாள்.
வட்சு நதிக்கரையில் இந்திரன் ஆட்சிக் காலத்தைப் போல், கொழுத்த குதிரையின் மாமிசத்தைச் சாப்பிடும் சந்தர்ப்பம், சுவாத நதிப் பிரதேசவாசிகளுக்கு இந்திர விழாவாகிய இன்றுமட்டுந்தான் கிடைக்கும். இந்திர
விழாவிற்கென்று நல்ல குதிரையை மக்கள் எல்லோரும் கூடித் தேர்ந்தெடுக்கிறார்கள். சாதாரணமாக, சுவாத நதிப் பிரதேசத்தில் குதிரை மாமிசம் சாப்பிடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் வருடத்தில் ஒரு நாளான இந்த இந்திர விழா அன்று, வேள்வியின் அவிர்ப்பாகமாக எல்லோரும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.
ஜனாதிபதி தனது ஜன சபையோடு, இந்திரனுக்குப் பிரியமான அந்தப் பலியைக் கொடுப்பதற்கு யாகசாலையின் முன்னே அமர்ந்திருக்கிறார். யாகத்தை நடத்துவதற்குரிய முறைகளும், பலி கொடுக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரமும் ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும். வாத்தியங்கள் முழங்க மந்திரம் ஓதி, அஸ்வத்தைப் பலியிடும் சகல சடங்குகளும் முடிந்தன. அப்பால் குதிரையின் தோலை அப்புறப்படுத்தி விட்டு, அதனுடைய சரீரத்தின் அவயங்களைத் துண்டு துண்டாக்கிச் சிலவற்றை முறைப்படி சமைத்தும், சிலவற்றைச் சமைக்காமலும் அக்னியில் ஆகுதி செய்தார்கள். வேள்வியின் அவிர்ப்பாகத்தை எல்லோருக்கும் வழங்கி முடிப்பதற்கு அந்தி நேரமாகி விட்டது.
மைதானம் முழுவதும் ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தனர். ஒவ்வொரு ஆணும் பெண்ணும், தங்களிடமுள்ளவற்றுள் உயர்ந்த ஆடைகளையும் சிறந்த ஆபரணங்களையுமணிந்து, அலங்காரமாகக் காட்சியளித்தனர். பெண்களில் அநேகர் காதுகளில் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தனர். வசந்த காலத்தின் கடைசி நாட்கள் அன்றை விழாவிற்காகவே மலர்ந்தன போன்ற விதவிதமான
மலர்கள் எங்கும் நிறைந்திருந்தன. யுவர்களும், யுவதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 83, புத்தகங்கள், என்னை, பக்கம், வால்காவிலிருந்து, இந்திர, சிறந்த, கங்கை, எல்லோரும், வேள்வியின், விட்டுக், குதிரையின், சுவாத, நதிப்